;
Athirady Tamil News

காதலியை கொன்று வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞர்: நர்சிங் மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்

0

சென்னையில் கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவி காதலனால் கொலை செய்யபட்டு உயிரைஇழந்துள்ளார்.

காதலன் வெறிச்செயல்
கேரளாவை சேர்ந்த மாணவி பவுசியா(20) சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி நர்சிங் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அறையில் நர்சிங் மாணவி பவுசியா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பவுசியாவின் அறையில் ஆசிக்(20) என்ற இளைஞர் தங்கி இருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்
காதலன் ஆசிக், பவுசியா உடன் ஏற்பட்ட பிரச்சனையில் அவரை கொலை செய்துள்ளார் என பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அத்துடன் பவுசியாவை கொலை செய்துவிட்டு அதை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்-லும் ஆசிக் வைத்துள்ளார்.

ஆசிக்கின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பார்த்து அதிர்ச்சியடைந்த பவுசியாவின் தோழிகள், விரைந்து வந்து வீடுதியில் பார்த்தபோது பவுசியா கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.