;
Athirady Tamil News

டயானா, சுஜித், ரோஹன தடை விதிக்கும் பிரேரணை நிறைவேற்றம் !

0

நாடாளுமன்ற உறுப்பினர்களான டயானா கமகே, சுஜித் மற்றும் ரோஹன ஆகியோருக்கு நாடாளுமன்ற அமர்வுக்கான தடை விதிக்கும் பிரேரணை 56 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான டயானா கமகே, சுஜித் சஞ்சய் மற்றும் ரோஹன பண்டார ஆகியோரின் தடை விதிப்பது தொடர்பான தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

இதன்படி குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் கிடைக்கப்பெற்றன. அதேவேளை 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.