;
Athirady Tamil News

ஆட்சியை பிடிக்கப்போவது யார்? 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் – தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

0

ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

4 மாநில தேர்தல்
ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த 2 மாதங்களாக பலகட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அதில் 4 மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு இன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மேலும், மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தான் மாநிலத்தின் 200 தொகுதிகளில் 199 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

அம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மைக்கு 100 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மத்திய பிரதேச மாநிலத்தின் 230 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை
அங்கு ஆட்சியை பிடிக்க பெரும்பான்மைக்கு 116 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் சத்தீஸ்கர் மாநிலத்தின் 90 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

அம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மைக்கு 46 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) ஆட்சி நடைபெற்று வரும் தெலுங்கானா மாநிலத்தின் 119 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க 60 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.

தெலுங்கானாவில் பாரதிய ராஷ்டிர சமிதி வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைக்குமா? அல்லது பாஜக அல்லது காங்கிரஸ் வெற்றிபெற்று புதிய ஆட்சி அமையுமா? என்பது இன்று தெரியவரும். தற்போது இந்த 4 மாநிலங்களிலும் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.