;
Athirady Tamil News

40 கொள்ளுப் பேரன் பேத்திகளுடன் 100வது பிறந்தநாள் கொண்டாடிய ஈரோடு தாத்தா

0

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஜவுளி வியாபாரி குமரகுரு தனது 5 தலைமுறை வாரிசுகளுடன் தன்னுடைய 100வது பிறந்தநாளை கொண்டாடி அசத்தியுள்ளார்.

100வது பிறந்தநாள்
தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்த ஜவுளி வியாபாரி குமரகுரு தன்னுடைய 5 தலைமுறை வாரிசுகளுடன் தன்னுடைய 100வது பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

இந்த விழாவில் அவரது 3 மகன்கள், 3 மகள்கள், 45 பேரன் மற்றும் பேத்திகள், 40 கொள்ளு பேரன் மற்றும் பேத்திகள் என கிட்டத்தட்ட 5 தலைமுறைகளைச் சேர்ந்த 100 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

எந்தவொரு உடல்நல குறைவும் இல்லாமல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் தங்களுடைய தாத்தா இருப்பதற்கு அவருடைய எளிமையான வாழ்க்கை முறையும் கடின உழைப்பும் தான் காரணம் என்று அவரது வாரிசுகள் பெருமையுடன் தெரிவித்துள்ளனர்.

மேலும் தாத்தா தங்களுக்கு மிகப்பெரிய ரோல் மாடலாக இருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு மதியம் கறி விருந்தும், பரிசு பொருட்களும் வழங்கப்பட இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.