;
Athirady Tamil News

வரி அதிகரிப்பின்றி நாட்டில் வருமானத்தை உயர்த்த முடியும்: வலியுறுத்தும் எம்.பி

0

மக்கள் மீதான வரியை அதிகரிக்காமல் நாட்டின் வருமானத்தை 50 வீதத்தால் உயர்த்த முடியும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கம்புருபிட்டியவில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் நேற்று(17) கலந்துக் கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வரி செலுத்தாமல் ஆடம்பர வாழ்க்கை வாழும் பணக்கார வர்க்கம் இந்த நாட்டில் இருப்பதாகவும், அந்த வகுப்பினரின் வருமானத்தை கண்டுகொள்ள அரசு பயப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வரி அதிகரிப்பு
செல்வந்தர்களின் வருமானம் பதிவாகும் வகையில் ஒரு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டால், புதிய வரிகள் தேவைப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

5 கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தும் சுமார் 2,500 பேர் வரை இந்த நாட்டில் இருப்பதாகவும், அதில் சிக்காதவர்களும் சுமார் 2,500 பேர் இருப்பதாகவும், அவர்களின் உண்மையான வருமானத்தை இன்னும் ஒரு மாதத்தில் தெரிவிக்கும் முறையை தயார் செய்ய முடியும் என சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

எழுந்துள்ள கேள்வி
மேலும், பச்சிளம் குழந்தை முதல் முதியவர் வரை அனைத்து மக்களிடமும் பெறுமதிசேர் வரியை மாத்திரம் 30,000 ரூபா அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், மக்களின் வருமானம் குறைந்துள்ள நிலையில் இவ்வாறான வரியை செலுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.