;
Athirady Tamil News

மக்கள் முன்னிலையில் பொலிஸார் மீது கொலை வெறித்தாக்குதல்! காரணம் என்ன

0

பிலியந்தலை சோமவீர சந்திரசிறி விளையாட்டரங்குக்கு அருகில் பெருந்திரளான மக்கள் பார்த்துக்கொண்டிக்க இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது கொலை வெறி தாக்குதலை மேற்கொண்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரை இரும்புக் கம்பியால் தாக்கி பலத்த காயப்படுத்தியதாகக் கூறப்படும் முச்சக்கரவண்டி சாரதி உட்பட ஐவரை கைது செய்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆபத்தான நிலையில் ஒருவர்
சம்பவத்தில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு காணி மீட்பு மற்றும் குடியேற்றப் பிரிவில் கடமையாற்றும் கெஸ்பேவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களே படுகாயமடைந்துள்ளனர்.

இவர்கள் இருவரையும் தாக்குவதற்காக சந்தேக நபர்கள் பயன்படுத்திய இரும்புக் கம்பி மற்றும் அவர்கள் வந்த காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தாக்குதலில் காயமடைந்த இரு உத்தியோகத்தர்களும் பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் களுபோவில போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் ஆபத்தான நிலையில் இருந்த கான்ஸ்டபிள் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனினும் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டமைக்கான காரணம் வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.