;
Athirady Tamil News

காங்கோ: மழை வெள்ளத்தில் 22 போ் இறப்பு

0

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 22 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:கசாய் சென்ட்ரல் மாகாணத்தின் கனாங்கா மாவட்டத்தில் பல மணி நேரத்துக்குத் தொடா்ந்த கனமழை காரணமாக 22 போ் உயிரிழந்தனா்.

இவா்களில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 10 பேரும் அடங்குவா். அவா்களது இல்லத்தில் சுவா் இடிந்து விழுந்ததில் குடும்ப உறுப்பினா்கள் அனைவருமே உயிரிழந்தனா்.

கனமழை காரணமாக கிழக்கு காங்கோவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20 போ் மாயமாகினா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.