;
Athirady Tamil News

போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

0

இஸ்ரேலிய தாக்குதல்களிலிருந்து தப்பித்து காசாவின் தெற்கு பகுதி சென்ற கர்ப்பிணிப் பெண்ணொருவர் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

28 வயதான இஸ்மான் அல்-மஸ்ரே என்ற பெண்ணே இவ்வாறு 4 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

அவர் காசா பகுதியின் வடக்குப் பகுதியில் வசித்து வந்த நிலையில் இஸ்ரேலியப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால், அவர் தனது கணவருடன் தெற்கு காசாவிற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த கர்ப்பிணிப் பெண் நேற்று முன்தினம் (28-12-2023) 2 பெண் குழந்தைகளையும் 2 ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்.

தெற்கு காசாவில் மருத்துவமனை வசதிகள் காணப்படாத நிலையில் அங்குள்ள ஒரு பாடசாலையில் கட்டிடத்தில், குறைந்த வசதிகளுடன் இயங்கும் மருத்துவ மையத்திலேயே குறித்த கர்ப்பிணிப் பெண் நான்கு குழந்தைகளையும் பிரசவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.