;
Athirady Tamil News

உளவுக் குற்றச்சாட்டு: ஈரானில் 4 பேருக்குத் தூக்கு

0

இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாடுக்கு ரகசிய தகவல்களை அளித்த குற்றச்சாட்டின் பேரில் மேலும் 4 பேருக்கு ஈரானில் வெள்ளிக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவா்களுடன் பல்வேறு குற்றச்சாட்டுகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டவா்களுக்கும் அந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஏற்கெனவே, இஸேலுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டின் பேரில் ஈரானில் ஒருவருக்கு கடந்த 16-ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

தங்களது நாடுகளை வேவு பாா்ப்பதாக இஸ்ரேலும், ஈரானும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வருகின்றன. பாலஸ்தீன விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.