;
Athirady Tamil News

யாழ் மாநகர சபையின் பவள விழாவை முன்னிட்டு பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்றைய தினம் விசேட திருப்பலி

0

யாழ் மாநகர சபையின் பவள விழாவை முன்னிட்டு பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் விசேட திருப்பலி நடைபெற்றது.

யாழ் மாநகர சபையின் பவள விழா ஆண்டு இந்த வருடம் கொண்டாடப்படுகின்ற நிலையில் ஆசிவேண்டி மதத்தலங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில் இன்றைய தினம் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது

பாசையூர் அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை ஜரோ செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்ற விசேட திருப்பலியில் யாழ்.மாநகர சபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன், மாநகர சபையின் துறைசார் பொறுப்பதிகாரிகள்,மாநகர சபை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஆரியகுளம் நாக விகாரையிலும், மஜ்ஜித் முகமதியா பள்ளிவாசலிலும் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.