;
Athirady Tamil News

நியூசிலாந்து உயர்ஸ்தானிகருடன் சஜித் பிரேமதாச சந்திப்பு!

0

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான நியூசிலாந்தின் உயர் ஸ்தானிகர் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கையின் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.