;
Athirady Tamil News

இலங்கையில் கடனாளியாக மாறியுள்ள இலட்சக்கணக்கான மக்கள் : பேராசிரியர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

0

நாட்டிலுள்ள முப்பது இலட்சத்து இருபத்து ஒன்பதாயிரத்து முந்நூறு குடும்பங்களில் ஆறு இலட்சத்து தொண்ணூற்று ஏழாயிரத்து எண்ணூறு குடும்பங்கள் தமது அன்றாட உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கடனாளிகளாக மாறியுள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கை தகவல்கள் தெரிவிப்பதாக பேராசிரியர் வசந்த அதுகோரள தெரிவித்துள்ளார்.

இதன்படி மொத்தக் கடனாளி குடும்பங்களில் உணவுக்காகக் கடன் பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 22.3 வீதமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய
69,7800 குடும்பங்கள் தமது அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யக் கடனாளியாக உள்ள நிலையில் இரண்டு இலட்சத்து ஐம்பத்து எட்டாயிரத்து இருநூறு பேர் அதற்குள் அடங்குவதாகவும் பேராசிரியர் கூறினார்.

இதேவேளை, கடனை மீளச் செலுத்துவதற்காக ஏறக்குறைய 370,000 குடும்பங்கள் கடன் பெற்றுள்ளதாகவும், 491000 குடும்பங்கள் பொருளாதார நடவடிக்கைகளுக்காக கடன் பெற்றுள்ளதாகவும் பேராசிரியர் வசந்த அது கோரள தெரிவித்தார்.

53,200 குடும்பங்கள் கட்டடங்கள் கட்டுவதற்கும் புதுப்பிப்பதற்கும் கடன் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

அடமானத்தால் கடனாளி
பொருளாதார நெருக்கடியின் பின்னர் (2022க்குப் பின்னர்) 688,000 குடும்பங்கள் கடனாளிகளாக மாறியுள்ளதாகத் தெரிவித்த வசந்த அத்துகோரள, பெரும்பாலானோர் அடமானச் செயற்பாடுகளில் கடன் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

அடமான முறையில் கடன் பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 9,70,000 என்று அவர் கூறினார். இது தவிர வங்கிகளில் 97000 குடும்பங்களும், நிதி நிறுவனங்களில் 272250 குடும்பங்களும், பண தரகர்களிடம் 303500 குடும்பங்களும் கடன் பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.