;
Athirady Tamil News

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள காலி சிறைக் கைதிகள்

0

காலி சிறைச்சாலையின் கைதிகள் ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர்கள் தற்போது காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், காய்ச்சலுடன் அடையாளங்காணப்பட்ட ஐவரே இவ்வாறு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மூளைக்காய்ச்சல்
அண்மையில் காலி சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு மூளைக்காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டது.

இதனிடையே, மாத்தறை சிறைச்சாலையில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரு கைதிகள் உயிரிழந்தனர்.

இந்த சூழலில் தற்போது அங்கு நிலைமை சீராக உள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.