;
Athirady Tamil News

வடக்கில் நல்லூரை விட மிகப்பெரிய ஆலயம் ஒன்றை கட்டுங்கள்! பச்சைக்கொடி காட்டிய ரணில்

0

வடக்கில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை விட மிகப்பெரிய ஆலயம் ஒன்றை அமைப்பதற்கான திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வமத தலைவர்களுடன் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அத்துடன் இந்த ஆலயம் அமைக்கும் திட்டத்தில் அதிபராகிய நான் தலையிடமாட்டேன் எனவும் வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் எவரும் தலையிடமாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முழு ஆதரவையும் வழங்குவேன்
வடக்கில் உள்ள இந்து மதத் தலைவர்கள் மற்றும் நல்லூர் கோவிலின் பொறுப்பதிகாரிகள் இணைந்து இதற்கான திட்டங்களை சமர்ப்பித்தால் அதற்கான முழு ஆதரவையும் வழங்குவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வடக்கில் பல்கலைக்கழகங்களை அமைக்க நான் அனைவருக்கும் அனுமதி வழங்கவுள்ளேன். நீங்கள் யாரை கொண்டு வேண்டுமானாலும் இங்கு பல்கலைக்கழகங்களை அமைக்கலாம் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.