;
Athirady Tamil News

பொருளாதாரப் போருக்கு முடிவு கட்டக்கூடிய வேட்பாளரையே களமிறக்கும் மொட்டுக் கட்சி : ரோஹித எம்.பி.

0

இலங்கையின் பொருளாதாரப் போரை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய பொருத்தமான வேட்பாளரையே ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி களமிறக்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியும் பெறுவோம்
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிட்டுகையில்,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் சிலரின் பெயர்கள் உள்ளன.

அவர்களில் பொருளாதாரப் போரை வெற்றிகொள்ளக்கூடிய வெற்றி வேட்பாளரையே களமிறக்குவோம். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியும் பெறுவோம்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் வேறு தேர்தல் நடந்தாலும் அதனையும் எதிர்கொள்வதற்குத் தயாராகவே இருக்கின்றோம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.