;
Athirady Tamil News

முல்லைத்தீவு வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல்: பல இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் அழிந்து நாசம்

0

முல்லைத்தீவு முள்ளியவளை காவல்பிரிவுக்குற்பட்ட தண்ணீரூற்று பகுதியில் புடவையகத்தோடு கூடிய இலத்திரனியல் பொருட்கள் திருத்தகம் ஒன்றில் தீ பரவியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று(10) அதிகாலை ஏற்பட்டுள்ளது.

திடீரென தீ ஏற்பட்டதை அவதானித்த அருகில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்று கூடி குறித்த வர்த்தகநிலையத்தில் பரவிய தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள்
இருப்பினும் குறித்த தீப்பரவல் காரணமாக வர்த்தகநிலையத்தில் இருந்த பல இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் முற்று முழுதாக எரிந்து அழிவடைந்துள்ளது.

தீ பரவல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முள்ளியவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.