;
Athirady Tamil News

உக்ரைனுக்கு ரஷ்யா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

0

உக்ரைன் மேற்கத்திய நாடுகளின் ஏவுகணைகளை பயன்படுத்தினால் அணு ஆயுதத்தை கையில் எடுப்போம் என்று ரஷ்யா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.

ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் டிமிட்ரி தலைவர் மெத்வதேவ் இது தொடர்பாக கூறும்போது,

” அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த நினைக்கிறது. இதை தற்காப்பாக கருத முடியாது.

ரஷ்ய – உக்ரைன் போர்
ஆனால், போரில் அணு ஆயுதத்தை ரஷ்யா பயன்படுத்துவதற்கான அடிப்படை விடயமாக இது அமையும்” என்றார்.

உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது.

இரு நாடுகளுக்கும் இடையேயான சண்டை கிட்டதட்ட இரண்டு ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது.

இதில் ஏராளமான உயிர்சேதம் மற்றும் பொருளாதார இழப்புகளை இருநாடுகளும் சந்தித்துள்ளன.

ஆயுத உதவி
உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி, நிதி உதவி அளித்து வருவதால் ரஷ்யாவை எதிர்த்து தீவிரமாக சண்டையிட்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.