;
Athirady Tamil News

மாலைதீவு நாடாளுமன்றத்தில் கடும் மோதல்: பரவும் காணொளி

0

மாலைதீவு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று (28.1.2024) நடைபெற்ற சிறப்பு கூட்டத்தின் போதே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்திற்குள் இரு தரப்பினரும் ஒருவொருக்கொருவர் அடித்துக்கொண்ட காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.

கட்சிகளுக்கு இடையே மோதல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மாலைதீவு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் செயல்படும் எதிர்க்கட்சி, அமைச்சர்கள் சேர்க்கப்பட்டதற்கு நடைபெறும் வாக்கெடுப்பை நிறுத்த கோரியது.

இதன் போது, முகம்மது முய்சுவுக்கு ஆதரவு கட்சிகளான மக்கள் தேசிய காங்கிரஸ் மற்றும் மாலைதீவு முற்போக்கு கட்சி ஆகியவற்றுக்கும் முன்னாள் ஜனாதிபதி முகம்மது சோலியின் மாலைத்தீவு ஜனநாயக கட்சிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து இரு தரப்பினரும் அடித்துக் கொண்டுள்ளனர். இந்த காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

மாலைதீவு வாக்குவாதம் முகம்மது முய்சுவால் புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு அமைச்சர்களுக்கு ஒப்புதல் வழங்கும் நோக்கத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே குறித்த மோதல் இடம்பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.