;
Athirady Tamil News

யாழில் இரண்டு நாள் காய்ச்சலினால் 14 மாத குழந்தை உயிரிழப்பு

0

யாழில். இரண்டு நாள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 14 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ரகுராம் சந்திரா எனும் 14 மாத குழந்தையே நேற்றைய தினம் திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை குழந்தைக்கு காய்ச்சல் காரணமாக பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, காய்ச்சலின் தீவிரம் காரணமாக குழந்தையை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதை அடுத்து , குழந்தையை போதனா வைத்தியசாலையில் பெற்றோர் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.