;
Athirady Tamil News

முன்பின் தெரியாத நபரிடம் மதுபானம் கேட்டு நச்சரித்த இளைஞர்..கல்லால் தாக்கி படுகொலை

0

இந்திய மாநிலம் கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் மதுபானம் கேட்டு தகராறு செய்ததால் கல்லால் தாக்கி கொல்லப்பட்டார்.

மதுபானம் கேட்டு தொந்தரவு
கர்நாடக மாநிலம் பல்லாரியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சுனில். இவர் துமகூருவுக்கு தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களை காண சென்றுள்ளார்.

பின்னர் கியாத்தசந்திராவில் உள்ள மதுபான விடுதிக்கு சென்று சுனில் மது அருந்தியுள்ளார். அப்போது குமாரசாமி (28) என்கிற இளைஞரும் அங்கு தன் நண்பர்களுடன் மது அருந்த வந்துள்ளார்.

அவர் சுனிலிடம் பணம் நிறைய இருப்பதை அறிந்து, தனக்கும் தன் நண்பர்களுக்கும் மதுபானம் வாங்கி தரவேண்டும் என்று கேட்டுள்ளார்.

சுனிலும் அவர்களுக்கு மதுபானம் வாங்கிக் கொடுத்துள்ளார். அதன் பின்னர் மாலையில் மீண்டும் அதே மதுபான விடுதிக்கு வந்த சுனிலிடம், மீண்டும் மதுபானம் வாங்கி அருந்தியுள்ளார் குமாரசாமி.

இதனைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக சுனிலிடம் சென்று மதுபானமும், சிறிதளவு பணமும் கொடுக்கும்படி குமாரசாமி கேட்டுள்ளார்.

கல்லால் தாக்கி படுகொலை
இதனையடுத்து அவரை ரயில் தண்டவாள பகுதிக்கு அழைத்துச் சென்ற சுனில், அங்கு குமாரசாமியை கடுமையாக தாக்கியுள்ளார்.

அத்துடன் கல்லைக் கொண்டு அவரின் முகம், தலையில் பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த குமாரசாமி அங்கேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் குமாரசாமியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தப்பியோடிய சுனிலை கைது செய்துள்ள பொலிஸார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.