;
Athirady Tamil News

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 19 இந்திய கடற்றொழிலாளர்கள்

0

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் சிறிலங்கா கடற்படையினரால் செய்யப்பட்டுள்ளனர்.

19 கடற்றொழிலாளர்கள் கைது
இதன்போது கடற்றொழிலில் ஈடுபட்ட 2 படகையும் அதிலிருந்த 23 கடற்றொழிலாளர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டஇந்திய கடற்றொழிலாளர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இன்று(08) நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ள குறித்த கடற்றொழிலாளர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.