;
Athirady Tamil News

யாழில். வீதி மின்குமிழ்களை திருடியவர்களை தடுத்த பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் மீது தாக்குதல்

0

வீதி மின் விளக்குகளை களவாட முயன்ற கும்பலை தடுக்க முற்பட்ட , சாவகச்சேரி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் , சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி மந்துவில் பகுதியில் கும்பல் ஒன்று வீதியில் மின் கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த வீதி மின் குமிழ்களை திருடியுள்ளனர்.

இதனை அவதானித்த மக்கள் , சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கு. குகானந்தனுக்கு அறிவித்துள்ளனர்.

அதனை அடுத்து அவ்விடத்திற்கு வந்த முன்னாள் உறுப்பினர் , மின் விளக்குகளை திருடிய நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது , அவர்கள் உறுப்பினர் மீது கொட்டனால் கடுமையாக தாக்கி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான முன்னாள் உறுப்பினரை அயலவர்கள் மீது மீட்டு வைத்தியசாலையில் , அனுமதித்தனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.