;
Athirady Tamil News

யாழில் மின்னல் வேகத்தில் மறைந்த தமன்னா

0

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஹரிகரன் இசை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நடிகை தமன்னா , நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு மற்றும் புகழ் ஆகியோர் யாழ்ப்பாணத்தை இன்றைய தினம் வந்தடைந்தனர்.

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதேவேளை , யாழ்ப்பாணம் வந்த நடிகை தமன்னா தன்னை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க வேண்டாம் என தனது உதவியாளர்கள் மூலம் கோரிக்கை விடுத்து , மிக வேகமாக வாகனத்தில் ஏறி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.

இசை நிகழ்வின் ஏற்பாட்டாளர்களால் , தமன்னா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களை சந்தித்து , புகைப்படம் எடுப்பதற்கு 30 ஆயிரம் ரூபாய் நுழைவு சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு, வந்தமை விமர்சனத்திற்கு உள்ளாகிய நிலையில் , தமன்னா விமான நிலையத்தில் தன்னை புகைப்படம் எடுக்க வேண்டாம் என கோரியமை அங்கிருந்த ரசிகர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.