;
Athirady Tamil News

யாழ்.நோக்கி வந்த பேருந்து எழுதுமட்டுவாழில் விபத்து – இருவர் படுகாயம்

0

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து உழவு இயந்திரத்துடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – கொடிகாமம் , எழுத்தமட்டுவாழ் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை குறித்த விபத்து இடம்பெறுள்ளது.

முன்னால் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்துடன் , பின்னால் சென்று , பேருந்து மோதியதில் விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை கொடிகாம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.