யாழ்.நோக்கி வந்த பேருந்து எழுதுமட்டுவாழில் விபத்து – இருவர் படுகாயம்
![](https://www.athirady.com/wp-content/uploads/2024/02/Screenshot-2024-02-12-154354-750x430.jpg)
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து உழவு இயந்திரத்துடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – கொடிகாமம் , எழுத்தமட்டுவாழ் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை குறித்த விபத்து இடம்பெறுள்ளது.
முன்னால் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்துடன் , பின்னால் சென்று , பேருந்து மோதியதில் விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை கொடிகாம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.