;
Athirady Tamil News

நதியில் கார் விழுந்து விபத்து.., சைதை துரைசாமி மகனின் உடல் 8 நாட்களுக்கு பின் மீட்பு

0

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்குப் பிறகு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய வெற்றி
சென்னை முன்னாள் மேயரும், அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகருமான சைதை துரைசாமியின் மகன், இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற போது அவர் பயணித்த கார் கடந்த வாரம் சட்லஜ் நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து மீட்கப்பட்டார். அவரது நண்பர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் வெற்றி துரைசாமிக்கு என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது.

சடலமாக மீட்பு
இந்நிலையில், 8 நாட்களுக்கு பிறகு வெற்றி துரைசாமியின் உடல் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அதாவது, விபத்து நடந்த இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாறையின் அடியில் சிக்கியிருந்த வெற்றி துரைசாமியின் உடலை மீட்பு படை வீரர்கள் கண்டெடுத்தனர்.

சில தினங்களுக்கு முன்பு வெற்றியின் உடை இருந்த பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், அவரை பற்றிய தகவல் தெரிவிப்போருக்கு ரூ.1 கோடி கொடுக்கப்படும் என்று சைதை துரைசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், வெற்றியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவரது உடல் விரைவில் சென்னைக்கு கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.