;
Athirady Tamil News

இலங்கையில் தேர்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

0

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்றையதினம் (13-02-2024) வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்திற்குள் நடத்தப்படும் எனவும், குறிப்பிட்ட காலவரையறுக்குள், அடுத்த ஆண்டு (2025) பொதுத் தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதி 2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல்களை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவைச் சார்ந்துள்ளதுடன், தேவையான நேரங்களில் தேர்தல் ஆணைக்குழுவுடன் அரசாங்கம் இணைந்து செயற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.