;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளர்களின் அசௌகரியங்களை தவிர்க்கும்பொருட்டு டிஜிட்டல் தொடுதிரை

0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளர்களின் அசௌகரியங்களை தவிர்க்கும்பொருட்டு டிஜிட்டல் தொடுதிரை இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வரும் பொது மக்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இடங்களை தேடி அலையும் நிலையினை மாற்றும் நோக்கத்தோடு விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதிக்கு முன்னால் இவ் டிஜிட்டல் தொடுதிரை காணப்படுகின்றன.

இவ் டிஜிட்டல் தொடுதிரையில் பொதுமக்கள் வைத்தியசாலை தொடர்பான தவல்கள் அனைத்தினையும் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இவ் தொடுதிரை வைத்தியசாலையில் ஏழு இடங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.