;
Athirady Tamil News

கொழும்பு உணவகமொன்றின் அசமந்த போக்கு ; உணவில் கரப்பான்பூச்சி

0

கொழும்பு – இரத்மலானை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இளைஞர்கள் குழு ஒன்று உட்கொண்ட துரித உணவில் (Egg Samosa) கரப்பான் பூச்சி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இது தொடர்பில் தெரியவருவதாவது,

இளைஞர்கள் குழு ஒன்று பிரபல தொலைக்காட்சி நிகழ்வில் நடைபெற்ற இசை போட்டியில் பங்குபற்றி இடைவேளையின் போது குறித்த உணவகத்தில் உணவருந்த வருகை தந்த நிலையிலேயே இந்த அருவருப்பான சம்பவம் நடைபெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இந்த உணவை உட்கொண்டமையால் வாந்தி மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார்.

இதுபற்றி விசாரிக்க சென்ற இளைஞர்கள் அசுத்தமான நிலையில் உணவு சமைக்கப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை, குறித்த உணவக உரிமையாளர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் உணவக ஊழியர்களும் அசமந்த போக்கில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.