;
Athirady Tamil News

மது போதையில் சாரத்தியம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

0

கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த கிளிநொச்சி காவல்துறையினர் குறித்த நபரை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

தண்டப்பணம் விதிப்பு
இந்த குற்றச்சாட்டுக்களுக்கு நாற்பதாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் அவரது சாரதி அனுமதி பத்திரம் ஆறு மாத காலத்துக்கு இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் பி.ஆர்.ஐ ஜெமில் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இவ்வாறு தண்டபணம் விதிக்கப்பட்டு சாரதி அனுமதிப்பத்திரம் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.