;
Athirady Tamil News

காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 103 பேர் பலி

0

காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 103 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயம் தொடர்பாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று(24) கூறியதாவது, காசா பகுதியில் கடந்த 24 மணி நேரமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 103 பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் குண்டுவீச்சு
மேலும், அந்தப் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29,606 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 69,737 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 7,800 க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.