;
Athirady Tamil News

சட்டவிரோதமாக நடத்தப்பட்ட மருந்தகம்: அதிரடியாக சுற்றிவளைத்த காவல்துறையினர்

0

புத்தளத்தில் அனுமதியற்ற மருந்து விற்பனை நிலையமொன்றை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து அதன் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.

புத்தளம் முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழு மற்றும் தேசிய மருந்து மற்றும் ஒழுங்குமுறை அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது நடவடிக்கை
அதன்போது, 144 வகையான மருந்துகளுடன் தொடர்புடைய மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த மருந்தகத்தை நடத்தி வந்த புத்தளம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை
அதன்படி, தேசிய மருந்துகள் மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் யுக்திய நடவடிக்கையின் கீழ் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.