;
Athirady Tamil News

யாழில் முடங்கிய சேவை; முற்றுகையிட்டு போராட்டம்!

0

யாழ்ப்பாணத்திஒல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இ.போ.ச பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையை கண்டித்து உள்ளூர் மற்றும் நீண்டதுார தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பயணிகள் பெரும் அசௌகரியம்
இதனால் தனியார் போக்குவரத்து சேவைகள் மாகாண மட்டத்தில் முடங்கியுள்ளது.

இந்நிலையில் இ.போ.ச பேருந்துகளும் சேவையில் ஈடுபட முடியாதளவு நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை சந்தித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.