;
Athirady Tamil News

கொழும்பின் புறநகர் பாடசாலையொன்றின் ஆசிரியர் செய்த செயல்: மாணவர்கள் மூவர் வைத்தியசாலையில்

0

கொழும்பு – பாதுக்க பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னணிப் பாடசாலையொன்றின் ஏழு மாணவர்களை ஆசிரியர் ஒருவர் தும்புத்தடியால் தாக்கியுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (02.03.2024) இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் விசாரணை
இதன்போது காயங்களுக்கு உள்ளான மூன்று மாணவர்கள் பாதுக்க பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் கற்பிக்கும் போது குறித்த மாணவர்கள், பாடசாலை சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றிருந்தமையை அடுத்தே, குறித்த ஆசிரியர், மாணவர்களை தண்டிக்கும் வகையில் தாக்கியுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதுடன் விசாரணைகளின் பின்னர் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுக்க பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.