;
Athirady Tamil News

கல்வி அமைச்சின் விசேட நடவடிக்கை ; சமூக வலைத்தளங்களில் வெளியான பரீட்சை வினாத்தாள்

0

சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் நாளை நடைபெறவுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான இறுதிப் பரீட்சையின் 10 ஆம் தர ஆங்கில மொழியின் இரண்டாம் பாகம் என கூறப்படும் வினாத்தாள் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இது தொடர்பில் மாகாண கல்விப் பணிப்பாளர் உபாலி சந்திர குமாரவிடம் கேட்டபோது, வெளியிடப்பட்டுள்ள வினாத்தாள் சரியானதா என்பதை அவதானித்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

மேல்மாகாண பாடசாலைகளின் மூன்றாம் தவணை தொடர்பில் தரம் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விஞ்ஞான வினாத்தாள் முன்கூட்டியே வெளியிடப்பட்ட சம்பவமும் நேற்று (01) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு மாகாண கல்விப் பணிப்பாளர் நிமல் ஜயவீரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக மேல் மாகாண கல்விச் செயலாளர் சிறிசோம லொக்குவிதான தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் தேசியப் பரீட்சையான 2023 உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாளின் முதலாம் மற்றும் இரண்டாம் பாகங்கள் சமூக ஊடகங்களில் வெளியானதால், இரண்டு வினாத்தாள்களையும் பரீட்சை திணைக்களம் இரத்துச் செய்து மீள்- தேர்வு நடத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.