;
Athirady Tamil News

யாழில் ஆலயம் அருகாமையில் புத்தர் சிலை – பொதுமக்கள் கடும் விசனம்

0

யாழ். சுழிபுரம் பகுதியில் காணப்படும் புத்தர் சிலை ஒன்று மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுழிபுரம் – சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் இந்த புத்தர் சிலை காணப்படுகின்றது.

மக்கள் குற்றம்சாட்டு

இந்நிலையில் குறித்த சிலையானது கடற்படையினரால் வைக்கப்பட்டு இருக்கலாம் எனவும் இது பின்னர் விகாரையாகத் தோற்றம் பெறலாம் எனவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இந்துப் பிரதேசமாக இருக்கும் இந்த இடத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்படுகின்றது

இதனால் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.