;
Athirady Tamil News

இந்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்: தேர்தல் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம்

0

இந்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் சட்டவிதிமுறைகளுக்கமைய இந்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்.

தேர்தல் நிச்சயம்
தேர்தல்கள் ஆணைக்குழு அதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளது.

நாட்டின் சட்டத்திற்கு அமைய செயற்படுவதாக இருந்தால் நிச்சயமாக தேர்தலை நடத்த வேண்டும்.

அதேபோல் எந்தவொரு நேரத்திலும் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.