;
Athirady Tamil News

வெளிநாடொன்றில் ஏற்பட்ட வாகன விபத்தில் இலங்கை இளைஞர்கள் இருவர் பலி

0

வெளிநாடு ஒன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விபத்து சம்பவம் கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள தன்சானியாவில் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சர்வதேச ஊடகச் செய்திகள்
இரு இளைஞர்களும் தன்சானியாவில் தாருஸ் சலாம் நகரிலிருந்து மஹேங்கே நகருக்கு பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்தவர்களில் ஒருவர் காலி கொட்டுகொட பகுதியை சேர்ந்த 23 வயதுடையவர் எனவும், மற்றையவர் காலி மகுலுவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.