;
Athirady Tamil News

மூன்று கடற்றொழிலாளர்களுடன் மீன்பிடி கப்பல் மாயம் : தேடுதல் தீவிரம்

0

கல்பிட்டியில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்ற மீன்பிடிக் கப்பல் மீண்டும் கரைக்கு திரும்பவில்லை என அக்கப்பலின் உரிமையாளர் கல்பிட்டி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்தக் கப்பலில் ஈச்சங்கடுவ பகுதியைச் சேர்ந்த 21, 37 மற்றும் 38 வயதுடைய மூன்று கடற்றொழிலாளர்கள் சென்றுள்ளனர்.

கடற்படையினருக்கு அறிவிப்பு
இது தொடர்பில் கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.