;
Athirady Tamil News

மே மாதம் வரையில் நீடிக்கவுள்ள வெப்பநிலையுடன் கூடிய வானிலை

0

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வெப்பநிலையுடன் கூடிய வானிலை எதிர்வரும் மே மாதம் வரையில் நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

தற்பொழுது நிலவி வரும் அதிக வெப்பத்துடனான வானிலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும் மே மாதம் வரையில் வெப்பநிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர் ஆவியாதல் அதிகரிப்பு
காற்றின் வேகம் குறைதல், வளிமண்டலத்தில் நீர் ஆவியாதல் அதிகரிப்பு போன்ற ஏதுக்களினால் வெப்பநிலை அதிகரித்துள்ளது.

இதற்கமைய மேல் மாகாணம், வவுனியா, மன்னார், ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், பொலனறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் கூடுதலான வெப்பநிலை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.