;
Athirady Tamil News

இளவரசி கேட் மருத்துவமனையில் இருந்தபோது மருத்துவமனை ஊழியர் செய்த செயல்: விசாரணை துவக்கம்

0

இளவரசி கேட் உடல் நலம் பாதிக்கப்பட்டு லண்டன் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு தற்போது வீட்டில் ஓய்வெடுத்துவரும் விடயம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், தனியுரிமை மீறலில் ஈடுபட்டதாக, மருத்துவமனை ஊழியர் ஒருவர் மீது விசாரணை துவக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளவரசி கேட்
பிரித்தானிய இளவரசரும் வருங்கால மன்னருமான இளவரசர் வில்லியமுடைய மனைவியாகிய இளவரசி கேட், ஜனவரி மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு லண்டன் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டது.

இளவரசிக்கு புற்றுநோய் தொடர்பான பிரச்சினை அல்ல என்று மட்டுமே பக்கிங்காம் அரண்மனை தெரிவித்திருந்ததேயன்றி, அவருக்கு என்ன பிரச்சினை என்றோ, அவருக்கு என்ன அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றோ தெரிவிக்கப்படவில்லை.

தனியுரிமை மீறல்
இந்நிலையில், இளவரசி கேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், மருத்துவமனை ஊழியர்களில் ஒருவர், இளவரசியின் மருத்துவ ஆவணங்களை (medical records) சோதித்து, அவருக்கு என்ன பிரச்சினை என்பதை அறிந்துகொள்ள முயற்சி செய்தது தெரியவந்ததாக தி மிரர் என்னும் பிரித்தானிய ஊடகம் தெரிவித்துள்ளது.

உடனடியாக, மருத்துவமனையை நிர்வகிக்கும் மூத்த அலுவலர் ஒருவர் அந்த விடயம் குறித்து பக்கிங்காம் அரண்மனைக்கு தெரியப்படுத்தியதாகவும், அந்த விடயம் தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததாகவும் அந்த ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரித்தானியாவின் தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு, இந்த தனியுரிமை மீறல் தொடர்பில் தங்களுக்கு ஒரு புகார் வந்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.