;
Athirady Tamil News

குளிக்கச் சென்ற பாடசாலை மாணவர்கள் நால்வர் மரணம்

0

அலவ்வ பிரதேசத்தில் நான்கு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மேலும், ஒரு மாணவர் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குளிக்கச் சென்ற மாணவர்கள்
அந்த பகுதயில் உள்ள மா ஓயாவில் குளிக்கச் சென்ற போது குறித்த நால்வரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் உள்ள ஆற்றில் குளிப்பதற்காக மாணவர்கள் ஐவரும் சென்ற நிலையில் விபத்திற்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொல்கஹவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.