;
Athirady Tamil News

தமிழர் தலைநகரில் சிவலிங்க சிலைகள் : போராட்டத்தில் குதித்த பௌத்த பிக்குகள்

0

திருகோணமலையில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் 1008 சிவலிங்க சிலைகள் வைக்கப்படவுள்ளதாக தெரிவித்து பௌத்த பிக்குகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக இன்று மாலை இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை கோகண்ணாபுர பாதுகாப்பு அமைப்பு
திருகோணமலை கோகண்ணாபுர பாதுகாப்பு அமைப்பு என்ற அமைப்பின் பௌத்த பிக்குகளினால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை ஒரு பௌத்த நாடு என்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அழிக்க முடியாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் கூறியுள்ளனர்.

பௌத்த பிக்குகளுடன் இணைந்து ஒரு சில மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தமிழர் வழிபாட்டு இடங்களை
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர் வழிபாட்டு இடங்களை தொல்பொருள் இடங்கள் என்ற போர்வையில் சிறி லங்கா தொல்பொருள் திணைக்களம் அபகரித்து வரும் நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.