;
Athirady Tamil News

வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

0

வவுனியா(Vavuniya), செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கிணற்றிலிருந்து மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்று (01.04.2024) மாலை மீட்க்கப்பட்டுள்ளது.

வவுனியா, செட்டிகுளம், முதலியார்குளம் பகுதியில் அமைந்துள்ள உயிரிழந்தவரின் வீட்டிலுள்ள கிணற்றில் இருந்தே சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

ஆரம்பக்கட்ட விசாரணை
இந்நிலையில், வாழை மரத்தின் குழையினை வெட்ட முற்பட்ட சமயத்தில் தவறி கிணற்றினுள் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிக்குளம் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.