;
Athirady Tamil News

மனித எலும்புகளில் இருந்து போதைப்பொருள் தயாரிப்பு! பிணங்களை தேடி அலையும் வியாபாரிகள்

0

மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில்(Sierra Leone) மனித எலும்புகளிலிருந்து போதைப்பொருள் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மனித எலும்புகளிலிருந்து உருவாகும் குறித்த குஷ் ரக போதைப்பொருளுக்கு அந்நாட்டு மக்கள் அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த குஷ் ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் புழக்கத்திலிருந்து வருகிறது.

புதைகுழி
இதன்படி குறித்த போதைப்பொருளின் பாவனை அப்பகுதி மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனைத் தயாரிப்பவர்கள் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து குஷ் போதைப்பொருளைத் தயார் செய்துவருவதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்நிலையில் சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகளை இந்த கும்பல் தோண்டியுள்ளதாக அந்த நாட்டுக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள்
இவ்வாறான குஷ் ரக போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் அதிபர் கவலை வெளியிட்டுள்ளார்.

குறித்த போதைப்பொருளை உட்கொள்வதன் மூலம் உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அந்நாட்டு அதிபர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.