;
Athirady Tamil News

கடுமையான வெப்பம்: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

0

வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தின் சில இடங்களுக்கு இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்றையதினம்(15) வெப்பக் குறியீடு, மனித உடலால் உணரப்படும் வெப்பம், கவனத்திற்குரிய அளவில் உள்ளதாக குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பம்
எனவே இது தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அதேவேளை, மேல், சப்ரகமுவ, ஊவா,தென் மாகாணங்களிலும் மற்றும் அம்பாறை மாவட்டத்திலும் இன்றைய தினம் மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.