;
Athirady Tamil News

கொலையில் முடிந்த மதுபான விருந்து: 8 பேர் கைது

0

பலாங்கொடை – பெட்டிகல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மதுபான விருந்து ஒன்றின் போது இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தீவிரமடைந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்போது, பெட்டிகல பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை
அத்தோடு, இந்த கொலை சம்பவம் தொடர்பில் எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.