;
Athirady Tamil News

புத்தாண்டு காலத்தில் நெடுஞ்சாலைகளின் வருமானம் 15 கோடி ரூபா!

0

புத்தாண்டு காலத்தில் நெடுஞ்சாலைகளின் வருமானம் 15 கோடி ரூபா தாண்டியுள்ளதாக கூறப்படுகின்றது. இத்தகவலை நெடுஞ்சாலை நடவடிக்கை மற்றும் பராமரிப்புப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.ஐ.டி.கஹடபிட்டிய தெரிவித்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையில் நெடுஞ்சாலைகள் மூலம் 15 கோடியே 98 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் 13ஆம் திகதி சனிக்கிழமை மட்டும் பெறப்பட்ட நெடுஞ்சாலைகளின் வருமானம் சுமார் இரண்டு கோடியே 49 இலட்சம் ரூபாவாக காணப்பட்டுள்ளது. மேலும், அக்காலப்பகுதியில் நெடுஞ்சாலைகளில் 43 இலட்சத்து 50,000 வாகனங்கள் பயணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.