;
Athirady Tamil News

பீகாரில் கடத்தப்பட்ட 95 சிறுவர்கள் உத்தரப்பிரதேசத்தில் மீட்பு : கடத்தப்பட்டது ஏன்? – பகீர் பின்னணி

0

பீகாரில் இருந்து உரிய ஆவணங்களின்றி அழைத்துவரப்பட்ட 95 சிறுவர்களை உத்தரப்பிரதேச குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

பீகார் மாநிலத்தில் இருந்து 95 சிறுவர்கள் உத்தரப்பிரதேச மாநிலம் சகரன்பூர் பகுதிக்கு, உரிய ஆவணங்கள் இன்றி அழைத்துவரப்பட்ட தகவல், அம்மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு கிடைத்துள்ளது. இதையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள், சிறுவர்களிடம் விசாரணை நடத்தியபோது, தாங்கள் எதற்காக அழைத்து வரப்பட்டோம் என்ற தகவலே அவர்களுக்கு தெரியவில்லை.

4 முதல் 12 வயது வரையிலான அந்த சிறுவர்கள், பெற்றோரின் கையெழுத்து உள்ளிட்ட எந்தவித உரிய ஒப்புதல் மற்றும் ஆவணங்களும் இல்லாமல் அழைத்து வரப்பட்டதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பீகார் மாநில அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த காவல்துறையினர், உத்தரப்பிரதேசத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களில் இயங்கும் மதரசாக்களுக்கு அனுப்பி வைப்பதற்காக, இவர்கள் அழைத்து வரப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

சிறுவர்களுக்கு கட்டாயக் கல்வி சட்டம் நடைமுறையில் இருக்கும் நிலையில், அவ்வாறு பள்ளிகளுக்கு அனுப்பாமல், இதுபோன்ற சிறுவர்களை மதரசாக்களில் தங்கவைத்து, நன்கொடை வசூலிக்கும் முறை இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.