;
Athirady Tamil News

தமிழர் பகுதியில் தமிழுக்கு உருவாகியுள்ள நிலைமை

0

ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள மாங்குளம் வைத்தியசாலையின் பெயர் பலகையில் உள்ள தமிழ் எழுத்து பிழையை திருத்துமாறு சமூக ஆர்வலர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் விசேடமாக அமைக்கப்பட்டிருக்கின்ற மருத்துவப் புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையம் மாங்குளம் ஆதார வைத்தியசாலை வளாகத்தை அண்டிய பகுதியிலே அமைக்கப்பட்டு எதிர்வரும் 26ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.

திறப்பு விழா
இந்நிலையில், வைத்தியசாலை முன்பாக அமைக்கப்பட்டிருக்கின்ற பெயர் பலகையில் மாங்குளம் என்பது தமிழ் மொழியில் தவறாக எழுதப்பட்டிருப்பதாகவும் இதனை மாற்றுமாறு பல தடவைகள் உரியவர்களுக்கு தெரியப்படுத்தியும் இன்றுவரை அது மாற்றப்படவில்லை.

மேலும், திறப்பு விழாக்கு முன்னதாக எழுத்துப்பிழையினை சரி செய்து பெயர்ப் பலகையினை மாற்றி திறப்பு விழாவினை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.