;
Athirady Tamil News

முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை… பழைய அணையை இடிக்கவும் அனுமதி கோரிய கேரள அரசு!

0

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டவும், பழைய அணையை இடிக்கவும் மத்திய அரசிடம் கேரளா அனுமதி கோரியுள்ளது.

முல்லைப்பெரியாறு அருகே புதிய அணை கட்ட அனுமதி கோரி
மத்திய அரசிடம் கேரள அரசு விண்ணப்பித்துள்ளது.

முல்லைப்பெரியாறு அணைக்குக் கீழே புதிய அணை கட்ட கேரள அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை செய்வதற்கான ஆய்வு எல்லைகள் கோரி கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் கேரள அரசு விண்ணப்பித்தது.

இந்நிலையில் இந்த விண்ணப்பம் வரும் 28ஆம் தேதி மதிப்பீட்டுக் குழுவின் பரிசீலனைக்காகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த புதிய அணை வண்டிப்பெரியாரிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போதுள்ள அணை கட்டப்பட்டு 128 ஆண்டுகள் ஆனதால் பாதுகாப்பு கருதி புதிய அணை கட்டவுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. புதிய அணை கட்டிய பின்னர் தமிழ்நாட்டிற்கு தற்போது வழங்குவதைவிட அதிக தண்ணீரை வழங்க முடியும் எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.